கோயில், மடப்பள்ளி எல்லாம் அப்பா, அவர் அப்பா காலம்..
தாத்தா கோவிலிலேயே சேவை செய்து கொண்டிருந்தவராம்… அப்பா மூன்று வயது இருக்கும்போது தாத்தா மறைந்ததாக சொல்லிக் கேள்வி.. நான்கு பிள்ளைகளை அங்கே இங்கே வேலை செய்து, மந்தார இலை தெய்த்து வளர்த்தாள் பாட்டி என்று.. அப்பா பழங்கதை சொல்லும்போது கேட்டதுண்டு.. பசி வயிற்றைக் கிள்ளும்போது கோயில் மடப் பள்ளிதான் கதி என்பார்…
“என்னடா இந்தப் பக்கம்…” என்று கேட்பவருக்குத் தெரியும் இவன் எதற்கு வந்திருக்கிறான் என்று…
“சரி கொஞ்சம் தண்ணி இழுத்துப் போடு…”
முப்பது குடம் தண்ணீர் இழுத்துப் போட்டபின், இலையில் புளியோதரை வயிறு நிரையக் கிடைக்கும்..
அந்த ஊரில் அந்தக் காலத்தில் எவ்வளவு ஆழத்தில் தண்ணீர் இருந்திருக்கும்?
நான் 55 வருடம் முன் பார்த்தபோது தெருக் குழாயில்தான் தண்ணீர்.. கிணறு வற்றித்தான் இருந்தது… இந்தனைக்கும், நம்ம சேப்பாக் மைதானம் கொள்ளும் அளவு கோவில் குளம்.. வற்றித் தான்..
நான் இப்பவும் ஆச்சரியப்படுவேன், எப்படிப் பசியுடன் 30 குடம் தண்ணீர் இழுத்தார் என்று.. வேறென்ன பசிதான் இழுத்திருக்கும்..
ஊர் கோவிலுக்குச் செல்லும்போது மடப்பள்ளிக் கிணற்றைத் தொட்டுப் பார்ப்பதுண்டு.
Add comment